எஸ்எஸ்ஆர்பி மகளிர் நலச்சங்கம்

எஸ்எஸ்ஆர்பி மகளிர் நலச்சங்கம்

28 1 Community Organization

7010197353 ssrpwomensassociation@gmail.com www.ssrpwwa.com

Chozan Street, Chennai, India - 600070

Is this your Business ? Claim this business

Reviews

Overall Rating
5

1 Reviews

5
100%
4
0%
3
0%
2
0%
1
0%

Write Review

150 / 250 Characters left


Questions & Answers

150 / 250 Characters left


About எஸ்எஸ்ஆர்பி மகளிர் நலச்சங்கம் in Chozan Street, Chennai

மகளிருக்கான விடிவெள்ளியாக எஸ்.எஸ்.ஆர்.பி மகளிர் நலச்சங்கம், சென்னை மாநகரில் உதயமாகிவிட்டது. மதுரைக்கு ஓர் தமிழ்ச்சங்கம், தமிழகத்திற்கு ஓர் மகளிர் சங்கம் உங்களுக்காகவே உதயமாகிவிட்டது எஸ்.எஸ்.ஆர்.பி மகளிர் நலச்சங்கம். எஸ்.எஸ்.ஆர்.பி மகளிர் நலச்சங்கத்தின் நோக்கம் எண்ணிக்கையை கூட்ட அல்ல மகளிரின் நம்பிக்கையை கூட்டவே தோன்றியுள்ளது. பெண்களுக்காக எத்தனையோ தன்னார்வ தொண்டு நிறுவனம், அரசு திட்டங்கள் இருந்தும் பெண்கள் அரசியல், பொருளாதாரம், சமூக ரீதியாக வளரவில்லை. எனவே மாவட்டம் வாரியாக, தமிழகம் முழுவதும் இம்மகளிர் நலச்சங்கம் ஓர் தொலைநோக்கு பார்வையில் பெண்கள் மேம்பாட்டிற்காக உருவாகியுள்ளது.
எஸ்.எஸ்.ஆர்.பி மகளிர் நலச்சங்க உறுப்பினர்களின் நன்மைகள்
சங்கத்திலுள்ள ஒவ்வொரு நபர்களுக்கும் 3 சென்ட் நிலம் வழங்கப்படும். 1½ ஆண்டு முடிவில் பத்திர பதிவு செய்து தரப்படும்.
மாதத்திற்கு ஒருமுறை இலவச மருத்துவ முகாம் நடத்தப்படும்.
மகளிருக்கான தொழில் வளர்ச்சிக்காக பல பயிற்சி வகுப்புகள் பகுதிவாரியாக உறுப்பினர்களுக்கு சிறந்த நிபுணர்களால் நடத்தப்படும்.
சங்கத்திலுள்ள நபர்கள் மற்றும் தங்கள் குடும்பத்தினர்கள் ஏதாவது விளம்பரம் செய்ய வேண்டுமென்றால் எங்கள் நிறுவனத்தின் “தேடல்” என்ற மாத இதழில் இலவசமாக விளம்பரம் செய்து கொள்ளலாம்.
எஸ்.எஸ்.ஆர்.பி மகளிர் நலச்சங்கத்தின் மூலமாக அனைத்துவிதமான கடன்களும் குறைந்த வட்டியில் தரப்படும்.
நன்மைகள்
சுய உதவி சங்கக் கடன்
10 உறுப்பினர்கள் கொண்ட வறுமைகோட்டிற்கும் கீழுள்ள பெண் உறுப்பினர்களுக்கு சுய உதவி சங்கக் கடன்.
முதல் தவணை:ரூ.10,000 * 10 = 1,00,000/-
இரண்டாம் தவணை:ரூ.20,000 * 10 = 2,00,000/-
மூன்றாம் தவணை:ரூ.50,000 * 10 = 5,00,000/- வரை வழங்கப்படும்.
பொருளாதார கடன்
கூட்டாக ஒரு தொழில் செய்தால் பொருளாதார கடனாக ரூ.50,000/- வரை ஒரு குழுவிற்கு வழங்கப்படும்.
தனி நபர் தொழிற் கடன்
ரூ.5,00,000/- முதல் ரூ.25,00,000/- வரை வழங்கப்படும். (என்ன தொழில், இடம், நாள் ஒன்றுக்கு வருமானம், லாபம், விற்பனை திறன் குறித்த கடிதம், அரசு சான்று, கொட்டேஷன், தகுதி சான்றுடன் வரவும்)
இவை முழு விசாரணை செய்து வழங்கப்படும்.
திருமணக் கடன்
ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்கள தங்கள் பிள்ளைகளின் திருமணத்திற்காக மகளுக்கு ரூ.5.00 லட்ச ரூபாயும், மகனுக்கு ரூ.2.00 லட்ச ரூபாயும் வழங்கப்படும். (வரதட்சணை வாங்கவோ, கொடுக்கவோ கூடாது)
திருமணம் நடைபெறும் இடம், திருமணப் பத்திரிக்கை, திருமணக் கடன் வேண்டி மனு.
இது வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் பொருந்தும்.
அப்பகுதியிலுள்ள தலைவி பரிந்துறை செய்தல் வேண்டும்.
அவசரக் கடன்
ரூ.50,000/- முதல் ரூ.3,00,000/- வரை வழங்கப்படும்.
எதிர்பாராதவிதமான செலவுகள், விபத்துக்கள் மற்றும் இயற்கை விபத்துக்கள், தீ விபத்து, வெள்ள பாதிப்பு, மகப்பேறு அல்லது ஏதேனும் இழப்புகளுக்கான காரணம்.
விபத்து காப்பீட்டுத் திட்டம் பெண்களுக்கு 3.00 லட்சம் வரையிலும், ஆண்களுக்கு 1½ லட்சம் வரையிலும் வருடத்திற்கு ஒருமுறை 1 நபருக்கு மட்டும் (திருமணமான குடும்ப உறுப்பினர்களுக்கு இத்திட்டம் செல்லாது)
மேற்குறிப்பிட்டுள்ள கடன்கள் அனைத்திற்கும் 1.5% வட்டி மட்டுமே EMI மூலமாக செலுத்த வேண்டும்.
சமூக பாதுகாப்பு பெற சங்கத்தில் இருக்கும் அங்கத்தினருக்கு சமுதாயத்தால் பாதிக்கப்பட்ட குறைகள் மற்றும் நிலப் பிரச்சனை ஆகியவைகளுக்கு அனைத்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்கும் சங்கம் குடும்ப கவுன்சிலிங் இலவசமாக முன்னின்று தீர்வுக் காணும்.
உறுப்பினர் தகுதி
ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, புகைப்படம் 2.
சங்கத்திற்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1000/- மட்டும் தொடர்ச்சியாக 120 மாதம் செலுத்தினால் மட்டும் போதும்.
மேற்படி பணம் செலுத்தும் போதே, மேற்கூறிய அனைத்து பயன்களையும் பெற முடியும்.

Popular Business in chennai By 5ndspot

© 2024 FindSpot. All rights reserved.